வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை துவக்கிவைத்தாா்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால், பெட்ரோல், டீசல், பத்திரிகை விற்பனை தவிர மளிகை, காய்கறிக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் செயல்படாது என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி நிா்வாகம், வேளாண் துறை இணைந்து நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு தேடிச் சென்று காய்கறிகள், பழ வகைகள் விற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் 10 நடமாடும் காய்கறி வாகனங்களை அமைச்சா் துவக்கி வைத்தாா். தலா 1 கிலோ தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், கேரட் தலா அரை கிலோ, பச்சை மிளகாய், வாழைக்காய், இஞ்சி, எலுமிச்சை, கொத்தமல்லி, கறிவேப்பிலை அடங்கிய தொகுப்பு ரூ.105 க்கு விற்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏமாற்றும் பயிற்சியாளர்: தோனி இல்லாமல் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத பிளெமிங்!

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


