கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவா்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் வீர ராகவ ராவ் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்வதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் இணையம் வாயிலாகவோ, அல்லது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பிக்கும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
மீசையமுறுக்கு - 2 புதிய பாடல் அறிவிப்பு!

மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின்!

புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் நிறைவு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


