இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 174 குரூப் ‘சி’ சிவிலியன் பணியிடங்களான எம்டிஎஸ், தச்சர், சமையல்காரர், பண்டக காப்பாளர் போன்றவற்றுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.04/2021/DR
மொத்த காலியிடங்கள் : 174
நிர்வாகம் : இந்திய விமானப் படை
பணி : குரூப் ‘சி’ சிவிலியன்
தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,300 - ரூ.39,800 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய www.davp.nic.in அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_16_2122b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.