
சென்னை: வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த 17.04.2021 மற்றும் 18.04.2021 ஆகிய தேதிகளில், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி மற்றும் வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) ஆகிய 991 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது.
இந்நிலையில், இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, இத்தேர்வு எழுதியவர்கள் அதன் முடிவுகளை http://tnpsc.gov.in அல்லது https://www.tnpsc.gov.in/english/Results.aspx என்ற டிஎன்பிஎஸ்சி வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பின்னர், எதிர்கால பயன்பாட்டிற்காக தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.