இந்து சமய அறிநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறிநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்துக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 13

பணி: தட்டச்சர் - 01

பணி: கணினி இயக்குபவர் - 01

பணி: தொழில்நுட்ப உதவியாளர்(சிவில்) - 01

பணி: தூய்மை பணியாளர்(பெருக்குபவர்) - 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, கணினி பிரிவில் இளநிலை பட்டம், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவலகத்தில் வேலைநாள்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தை நேரில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி - 620 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com