இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டம்‌, மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில் நடப்பு கல்வி ஆண்டில்(2021-2022) (3 ஆண்டுகள்) ஓதுவார் பயிற்சி பள்ளி தேவார இசை ஆசிரியர், சங்கீத இசை ஆசிரியர்(கு

News image
Updated On :17 நவம்பர் 2021, 10:01 am

தினமணி

திருச்சி மாவட்டம்‌, மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில் நடப்பு கல்வி ஆண்டில்(2021-2022) (3 ஆண்டுகள்) ஓதுவார் பயிற்சி பள்ளி தேவார இசை ஆசிரியர், சங்கீத இசை ஆசிரியர்(குரலிசை) பணிக்கு மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை
பணியிடம் : திருச்சி சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோவில் 
மொத்த காலியிடங்கள் : 02 

பணி: தேவார இசை ஆசிரியர் - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். 
தேவார இசைத் துறையில் 5 ஆண்டுகளுக்கு குறையாத தொழில்முறைப் பணியறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: இசை ஆசிரியர்(குரலிசை) - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேவார இசைத் துறை மற்றும் சங்கீத துறையில்(குரலிசைத்துறை) 5 ஆண்டுகளுக்கு குறையாத  தொழில்முறைப் பணியறிவு பெற்றிருத்தல் வேண்டும். அல்லது மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகம், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலம் இசையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது தலைப்பு பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.samayapurammariammantemple.org அல்லது https://hree.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112.   

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.