மின்சாரத் துறையில் இளநிலை பொறியாளர் வேலை: 45 காயிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் மின்சாரத் துறையில் காலியாக உள்ள 45 இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 2-3/ED/Estt./A3/2021-22
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 42
சம்பளம்: மாதம் ரூ.33,000
வயதுவரம்பு: 31.01.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி: Superintending Engineer-cum-HoD, Electricity Department, No.137, N.S.C. Boss Road, Puducherry -605 001
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 25.04.2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022
Related Article
ரூ.1 லட்சம் சம்பளத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 613 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ரூ.56,100 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெறாதவா்கள் பணியைத் தொடரத் தகுதியற்றவா்கள்: உயா் நீதிமன்றம்