யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

ரூ. 40 கோடி மோசடி புகார்: காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்!

கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்...

News image

ரூ.40 கோடி ஊழல் தொடர்பாக, மேயர், மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி. - DIN

Updated On :17 ஜூலை 2026, 1:40 pm IST

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி சாதாரணக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், கோவை செம்மொழிப் பூங்கா பணிகள் மேற்கொண்டதில் ரூ. 40 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பெண் கவுன்சிலர்கள், அவரை இழுத்து தாக்கினர். இதனால் மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை மேயர் கா.ரங்கநாயகி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தொடந்து கூட்டத்தை விட்டு வெளியேறிய கவுன்சிலர் காயத்ரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "செம்மொழிப் பூங்கா பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது, மாநகராட்சியில் நடைபெற்ற தணிக்கை மூலமாகத் தெரிய வந்துள்ளது. இதைக் கேட்டால் என்னைத் தாக்குகின்றனர். முதல்வர் விஜய் இச்சம்பவத்தைப் பார்த்தால் திமுகவினரைச் சும்மா விடமாட்டார்" என்றார்.

Summary

Rs. 40 crore fraud allegation: DMK councilors attack Congress councilor in coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.