மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகத்தில் (என்பிசிசி) காலியாக உள்ள உதவி மேலாளர், சீனியர் திட்ட அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகம் (என்பிசிசி)
மொத்தக் காலிப் பணியிடம் : 11
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager (Software Developer) - 04
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப்பட்டம் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Sr. Project Executive (Information Technology) - 02
தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Law) - 03
தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,000 முதல் ரூ.1,40,000 மாதம்
இதற்கு விண்ணப்பிக்கலாம்| மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1149 பணியிடங்கள்: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2022
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nbccindia.com அல்லது https://www.nbccindia.com/pdfData/jobs/01_2022_AMSoftware_SPEIT_AMLAW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.