ரூ.1,15,400 சம்பளத்தில் மருத்துவத் துறையில் புதிய வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ரூ.1,15,400 சம்பளத்தில் மருத்துவத் துறையில் புதிய வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?


தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

விளம்பர எண்கள். 03/MRB/2022, 04/MRB/2022, 05/MRB/2022, 06/MRB/2022

மொத்த காலியிடங்கள்: 84

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Pharmacist(Siddha) - 73
பணி: Pharmacist (Ayuveda) - 06
பணி: Pharmacist (Unani) - 02
பணி: Pharmacist (Homoeopathy) - 03

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 வழங்கப்படும்.

தகுதி: பணி சம்பந்தப்பட்ட துறையில் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2022

மேலும் விவரங்கள் அறிய mrb.tn.gov.in அல்லது http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com