அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

எஸ்எஸ்சி-இன் 2,268 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி தில்லி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள தலைமை காவலர்- உதவி வயர்லெஸ் ஆப்ரேட்டர் வேலை.

News image
Updated On :16 ஜூலை 2022, 10:11 am


மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி தில்லி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள தலைமை காவலர்- உதவி வயர்லெஸ் ஆப்ரேட்டர், டெலி-பிரிண்டர் ஆப்ரேட்டர் (டிபிஓ), கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2,268

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Head Constable -Assistant Wireless Operator (AWO)
பணி: Tele-Printer Operator (TPO)
காலியிடங்கள்: ஆண்கள் - 573, பெண்கள் - 284
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 83,100
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், மெக்கானிக் மற்றும் ஆப்ரேட்டர் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் சிஸ்டத்தின் வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி:  Constable (Driver)
காலியிடங்கள்: 1411
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்ற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.07,2022

மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CDDP_08072022.pdf மற்றும்https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CATDP_08072022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related Article

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

ராணுவத்தில் குரூப் 'சி' வேலைவாய்ப்பு அறிவிப்பு: 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

யாருக்கு வாய்ப்பு? ரூ. 63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை

உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.