மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. ஆப்பரேட்டர் (கம்யூனிகேசன்) - 35
2. எலக்ட்ரீசியன் - 30
3. வெல்டர் - 24
4. மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (பிளாக் ஸ்மித்) - 22
5. மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (குக்) - 86
6. டிராப்ட்ஸ்மேன் - 14
7. ஹிந்தி டைப்பிஸ்ட் - 10
8. சூப்பர்வைசர் - 29
தகுதி : சூப்பர்வைசர் பணிக்கு மட்டும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 26.9.2022 தேதியின்படி மல்டி ஸ்கில்டு வொர்க்கர் பணிக்கு 18 முதல் 25க்குள்ளும் இதர பணிகளுக்கு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://bro.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.9.2022
வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ரூ.1 லட்சம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா?
தமிழக அரசில் 155 பேராசிரியர் பணி: டிஆர்பி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
மத்திய அரசு வேலை வேண்டுமா? பிஇஎல் நிறுவனத்தில் டிப்ளமோ இன்ஜினியர்களுக்கு வேலை