எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. ஆப்பரேட்டர் (கம்யூனிகேசன்) - 35
2.  எலக்ட்ரீசியன் - 30
3.  வெல்டர் - 24
4.  மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (பிளாக் ஸ்மித்) - 22
5.  மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (குக்) - 86
6.  டிராப்ட்ஸ்மேன் - 14
7.  ஹிந்தி டைப்பிஸ்ட் - 10
8.  சூப்பர்வைசர் - 29 

தகுதி : சூப்பர்வைசர் பணிக்கு மட்டும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 26.9.2022  தேதியின்படி மல்டி ஸ்கில்டு வொர்க்கர் பணிக்கு 18 முதல் 25க்குள்ளும் இதர பணிகளுக்கு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : http://bro.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  26.9.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com