அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும்.

News image
Updated On :17 டிசம்பர் 2024, 4:37 am IST

சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை எதிா்கொள்வோா் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிச. 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தோ்வுக் கட்டணம் செலுத்துதல், தமிழ்த் தகுதித் தோ்வுக்கு விலக்குப்பெற சான்றிதழ் பதிவேற்றம், தோ்வு மையத்தை தோ்ந்தெடுப்பது ஆகியவற்றுக்கு டிச. 18-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.