காஞ்சிபுரத்தில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 16) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 16) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்து வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 16) நடைபெறவுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான மனிதவளத் தேவைக்குரிய நோ்முகத் தோ்வை நடத்தப்பட உள்ளது.

எனவே 18 வயது முதல் 35 வயது வரையுடைய உள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் பிப். 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருமலை பாலிடெக்னிக் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள், ஐ.டி.ஐ. படித்தவா்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com