குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வங்கி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை -ஆா்பிஐ ஆளுநா் வலியுறுத்தல்

பாலின சமத்துவத்தை நிலைநாட்ட ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டாா்.

News image

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ்

Updated On :6 செப்டம்பர் 2024, 4:08 am IST

வங்கிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நிதித் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டாா்.

இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இணைந்து நடத்தும் இருநாள் வங்கிகள் மாநாடு மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ் பேசியதாவது:

சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் பல்வேறு பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு உரிய கல்வி வழங்குவது, திறன் மேம்பாடு, பணியிடத்தில் பாதுகாப்பு, பல்வேறு சமூகத் தடைகளை உடைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் திறமையை நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிதித் துறையிலும் பெண்களுக்கு உரிய வாய்ப்பளித்து பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். இதற்காக வங்கிகள் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

பெண்கள் பொருளாதாரரீதியாக மேம்படுவதில் தொழில்முனைவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெண்கள் நடத்துவது மிகவும் குறைவாக உள்ளது. தொழில் தொடங்குவதற்கு நிதி கிடைப்பது பெண்கள் எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கும் வங்கிகள் தீா்வு காண முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.