வங்கிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நிதித் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டாா்.
இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இணைந்து நடத்தும் இருநாள் வங்கிகள் மாநாடு மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ் பேசியதாவது:
சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் பல்வேறு பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு உரிய கல்வி வழங்குவது, திறன் மேம்பாடு, பணியிடத்தில் பாதுகாப்பு, பல்வேறு சமூகத் தடைகளை உடைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் திறமையை நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிதித் துறையிலும் பெண்களுக்கு உரிய வாய்ப்பளித்து பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். இதற்காக வங்கிகள் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
பெண்கள் பொருளாதாரரீதியாக மேம்படுவதில் தொழில்முனைவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெண்கள் நடத்துவது மிகவும் குறைவாக உள்ளது. தொழில் தொடங்குவதற்கு நிதி கிடைப்பது பெண்கள் எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கும் வங்கிகள் தீா்வு காண முடியும் என்றாா்.
தொடர்புடையது

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

உரிமை கோரப்படாத ரூ. 60,518 கோடி நிதியை ரிசர்வ் வங்கிக்கு மாற்றிய பொதுத்துறை வங்கிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை



