பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2025, 12:21 am

Din

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்.

துணை ஆட்சியா் பதவியிடங்கள் 28, டிஎஸ்பி, 7, வணிகவரி உதவி ஆணையா் 19 என குரூப் 1 பிரிவைச் சோ்ந்த மொத்தம் 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1ஏ பிரிவைச் சோ்ந்த 2 இடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.