இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தினமும் ரூ.750 சம்பளத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலை வேண்டுமா?

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக பணியமர்த்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:12 am

DIN

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக பணியமர்த்திட தகுதியானவர்களிடம் இருந்து வெள்ளிக்கிழமை(ஜன.10) மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.34,000

பணி: மருந்து வழங்குநர்

காலியிடங்கள்: 5

சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.750

பணி: பல்நோக்கு பணியாளர்கள்

காலியிடங்கள்: 12

சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.300

பணி: தரவு உதவியாளர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: சித்த மருத்துவ ஆலோசகர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: சிகிச்சை உதவியாளர் - பெண்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: மருந்து வழங்குநர் நடமாடும் பழங்குடியினர் சித்த மருந்தகம்

காலியிடங்கள்: 1

சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.750

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எட்டாம் வகுப்பு டி.பார்ம், பிஎஸ்எம்எஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: wwww.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட கல்வித்தகுதிச் சான்று, முன்னுரிமை சான்று உள்ளிட்ட உரிய சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலசங்கம், மாவட்ட சித்த மருத்தவர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் - 624001 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேறுமாறு அனுப்ப வேண்டும்.

தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் நாள் குறித்த தகவல் பதிவஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.