தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞா்கள்.
தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞா்கள்.கோப்புப்படம்

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு

முகாமில் பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும், விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com