காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல நெல் கொள்முதல் மையங்களில் கீழ்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2025, 6:02 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல நெல் கொள்முதல் மையங்களில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரம் வருமாறு:

விளம்பர எண்: E1/07156/2021

பணி: பருவகால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள்: 100

தகுதி: வேளாண் அறிவியல், பொது அறிவியல், பொறியியல் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 5,285 + தினப்படி

பணி: பருவகால உதவுபவர்

காலியிடங்கள்: 100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,218 + தினப்படி

பணி: பருவகால காவலர்

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5,218 + தினப்படி

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு போக்குவரத்து படியாக ரூ.100 வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் தங்களது முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிப்காட் காம்ளக்ஸ்; மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்), தூத்துக்குடி மாவட்டம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.7.2025

Summary

Applications are invited from eligible male and female candidates for the following posts at the Thoothukudi Zonal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.