இந்து அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்து அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உபகோயில் மேளம் குழு

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓதுவார்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட 3 ஆண்டு ஓதுவார் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: உபகோயில் எழுத்தர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பெருக்குபவர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: காவலர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: கூர்க்கா

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: திருவலகு

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஏவலர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: சலவைத் தொழிலாளர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: சீட்டு விற்பனையாளர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 1.7.2024 தேதியின்படி 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

திருக்கோயிலுக்கு எதிகார வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் இத்துறைக்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியாற்றவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்று, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து உதவி ஆணையர், அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையும், கோவை-641 305 என்ற அஞ்சல் முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாகவே கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com