மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

News image

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை

Updated On :2 மார்ச் 2025, 10:52 am

DIN

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மருந்தாளுநர் (Pharmacist)

மொத்த காலியிடங்கள்: 425

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400

தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருந்தியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து தமிழ்நாடு மருத்தியல் கவுன்சிலில் (பார்மசி) சான்றிதழை பதிவு செய்து, ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில் தமிழ்மொழித் தேர்வு ஒரு மணி நேரமும், கணினி வழியில் மருத்தியல் தேர்வு 2 மணி நேரமும் நடைபெறும். தேர்வுக்கான தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தேர்வு நுழைவுச்சீட் அஞ்சல் மூலம் அனுப்பப்படாது. தேர்வு நுழைவுச்சீட் பதிவு செய்வதற்கான தகவல் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து இதர பிரிவினரும் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.3.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.