பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். BOB/HRM/REC/ADVT/2025/02
பணி: Specialist Officers (Senior Manager, Manager Officer)
காலியிடங்கள்: 518
சம்பளம்: மாதம் ரூ. 48.400 முதல் ரூ. 67, 160
Sреcialist Officer விண்ணப்பிக்கலாம்
வயதுவரம்பு: 1.2.2025 தேதியின்படி முதுநிலை மேலாளர் பணிக்கு 27 முதல் 37 வயதிற்குள்ளும், Manager Officer பணிக்கு 22 முதல் 32-க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். மேலும் பணி அனுபவத்திற்கேற்பவும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பொறியில் துறையில் கணினி அறிவில், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல். சந்தையியல் பிரிவில் எம்பிஏ, எம்சிஏ, சந்தையியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருப்பதுடன் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? டிஎச்டிசி நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.100. இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை www.bankofbaroda in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.3.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி: பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,80,000 சம்பளத்தில் ஓஎன்ஜிசி-ல் பொறியாளர், புவியியலாளர் பணி!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



