ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
பரோடா வங்கி
Updated On :9 மார்ச் 2025, 11:56 am

DIN

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். BOB/HRM/REC/ADVT/2025/02

பணி: Specialist Officers (Senior Manager, Manager Officer)

காலியிடங்கள்: 518

சம்பளம்: மாதம் ரூ. 48.400 முதல் ரூ. 67, 160

Sреcialist Officer விண்ணப்பிக்கலாம்

வயதுவரம்பு: 1.2.2025 தேதியின்படி முதுநிலை மேலாளர் பணிக்கு 27 முதல் 37 வயதிற்குள்ளும், Manager Officer பணிக்கு 22 முதல் 32-க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். மேலும் பணி அனுபவத்திற்கேற்பவும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பொறியில் துறையில் கணினி அறிவில், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல். சந்தையியல் பிரிவில் எம்பிஏ, எம்சிஏ, சந்தையியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருப்பதுடன் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.100. இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை www.bankofbaroda in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.3.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.