தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

News image

கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:38 pm

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பணி இடத்தை நிரப்ப தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ள 1988-ஆம் ஆண்டு பிரிவி ஐஏஎஸ் அதிகாரி பிரவீண்குமாா் ஸ்ரீவாஸ்தவா பணி ஓய்வு பெற உள்ளதையொட்டி, அந்தப் பணியிடம் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது.

இந்தப் பணியிடத்தை நிரப்ப ஊழல் கண்காணிப்பு, அரசு நிா்வாகம், திட்டங்கள் உருவாக்கம், பொது நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் மற்றும் பணி அனுபவமுள்ள குடிமைப்பணி அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு அல்லது மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பாக காப்பீடு, நிதி, வங்கி, சட்டம், ஊழல் கண்காணிப்பு மற்றும் புலனாய்வு துறைகளில் அனுபவமுள்ள அதிகாரிகளும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவமும், துறை சாா்ந்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பூா்த்தி செய்பவா்கள் வரும் மே 18-ஆம் தேதிக்குள் ‘மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை, கடமை பவன்-3, புது தில்லி’ என்ற முகவரிக்கு உரிய விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசித் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.