விண்ணப்பித்துவிட்டீர்களா? இரும்பு ஆலைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பயர்மேன் கம் பயர், என்ஜின் ஓட்டுநர், உதவி மேலாளர், மருத்துவ அதிகாரி, ஆலோசகர் பணிகள் என 259 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா? இரும்பு ஆலைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சேலம் இரும்பு ஆலை, சத்தீஸ்கரில் உள்ள பிலாய் இரும்பு ஆலை, மகாராஷ்டிரம் மாநிலம் சந்திராபூர் பெரோ அலாய் ஆலைகளில் காலியாக உள்ள அட்டண்டன்ட் கம் டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பயர்மேன் கம் பயர், என்ஜின் ஓட்டுநர், உதவி மேலாளர், மருத்துவ அதிகாரி, ஆலோசகர் பணிகள் என 259 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 259

வயதுவரம்பு: 24 முதல் 44 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் மற்றும் பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை: http://sailcareers.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com