ராணுவத்தில் அதிகாரி வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!
By | Published On : 07th January 2023 09:21 AM | Last Updated : 07th January 2023 10:45 AM | அ+அ அ- |

ராணுவத்தில் காலியாக உள்ள 395 அதிகாரிப் பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.03/2023-NDA-1
தேர்வின் பெயர்: National Defence Academy & Naval Academy Examination-2023
காலியிடங்கள்: 395
வயதுவரம்பு: 2.7.2004க்கும் 1.7.2007க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16.4.2023
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 2023 - செப்டம்பர்- 2023
எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜனவரி-2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconlin.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.1.2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...