ராணுவத்தில் அதிகாரி வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!

ராணுவத்தில் காலியாக உள்ள 395 அதிகாரிப் பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
ராணுவத்தில் அதிகாரி வேலை வேண்டுமா?  யுபிஎஸ்சி அறிவிப்பு!


ராணுவத்தில் காலியாக உள்ள 395 அதிகாரிப் பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.03/2023-NDA-1

தேர்வின் பெயர்: National Defence Academy & Naval Academy Examination-2023

காலியிடங்கள்: 395

வயதுவரம்பு: 2.7.2004க்கும் 1.7.2007க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். 

தகுதி: இயற்பியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16.4.2023

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 2023 - செப்டம்பர்- 2023
எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜனவரி-2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconlin.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.1.2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com