குரூப் 4 முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் நேற்று இணையத்தில் ட்ரெண்டானது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
இந்த நிலையில், குரூப் 4 முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.