

சென்னை-மங்களபுரம் இடையிலான ரயில் செவ்வாய்கிழமை அதிகாலை தடம் புரண்டது.
சென்னை-மங்களபுரம் இடையிலான 12601 அதிவிரைவு மெயில் ரயில், ஷோரணூர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது செவ்வாய்கிழமை அதிகாலை தடம் புரண்டது. பாலக்காடு வழித்தடத்தில் இருந்து ஷோரணூர் ரயில் நிலையத்தில் நுழையும் இடத்தில் அதிகாலை 5:50 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதனால், அப்பகுதியிலான ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின்னர் தடம் புரண்ட ரயில் சரிசெய்யப்பட்டது. எனவே செவ்வாய்கிழமை மதியம் முதல் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.