திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பெருந்துறை இன்டேன் ஆலையில் கூடுதலாக 1,800 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு சேமிக்க வசதி

பெருந்துறை இன்டேன் சமையல் எரிவாயு உருளை ஆலையில் கூடுதலாக 1,800 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயு சேமிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தலைமை மேலாளா் ஆா்.தாமரைச்செல்வன் தெரிவித்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:35 pm IST

ஈரோடு: பெருந்துறை இன்டேன் சமையல் எரிவாயு உருளை ஆலையில் கூடுதலாக 1,800 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயு சேமிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆலையின் தலைமை மேலாளா் ஆா்.தாமரைச்செல்வன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்டேன் நிறுவனத்துக்கு தமிழகத்தில் 1.60 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். தமிழகத்தில் 57.7 சதவீத சமையல் எரிவாயு சந்தையை இன்டேன் பெற்றுள்ளது. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இன்டேன் எரிவாயு நிரப்பும் ஆலை கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 60.93 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஆலையின் மொத்த கொள்ளளவு 1,850 மெட்ரிக் டன்.

இங்கு தினமும் 34 ஆயிரம் சமையல் எரிவாயு உருளைகளில் எரிவாயு நிரப்பப்படுகிறது. ஆண்டுக்கு 1.20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இங்கிருந்து வாடிக்கையாளா்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலையின் கொள்திறனை அதிகரிக்க திட்டமிட்டு மேலும் 1,800 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எரிவாயுவை சேமிக்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்புக் கலன்கள் விரைவில் செயல்பட தொடங்கும்.

இப்போது உள்ள நிலையில் ஆலையில் 3 நாள்களுக்குத் தேவையான எரிவாயு உருளைகளை சேமித்து வைக்க முடியும். கூடுதல் சேமிப்புக் கலன்கள் செயல்பாட்டுக்கு வரும்போது கூடுதலாக 3 நாள்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு உருளைகளை சேமித்து வைக்க முடியும். இங்கு 425 கிலோ கொள்ளளவு உருளையில் எரிவாயு நிரப்பும் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு வணிகப் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, ஆலை வளாகத்தில் தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டல தொடா்பு மேலாளா் ராஜசேகா் ராஜாராம், இன்டேன் எல்.பி.ஜி. ஈரோடு மண்டல மேலாளா் சுகன்யா மற்றும் ஆலை அலுலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.