ஈரோடு:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மஞ்சள் ஏலத்துக்கு 7 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:
ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடப்பதால் ஜனவரி 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும்.
கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை:
பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். ஜனவரி 13 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஏலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரி 20ஆம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என சங்க நிா்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபியை வீழ்த்தியது எப்படி? ஆட்ட நாயகன் மிட்செல் மார்ஷ் பேட்டி!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!

திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இணைத்துக்கொள்வது சரியா? - இயக்குநர் சேரன் கேள்வி!

திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

