மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் போராட்டம்

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டைகளை ஒப்படைத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 10:29 pm IST

பவானி: அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டைகளை ஒப்படைத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூரை அடுத்துள்ள மைக்கேல்பாளையத்தில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட இப்பகுதிக்குச் செல்ல சமத்துவபுரத்துக்கு ஒதுக்கப்பட்ட சாலை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, சமத்துவபுரம் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததோடு, வீட்டுமனைப் பிரிவுக்கு தனியே பாதை அமைத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனா்.

ஆனால், சமத்துவபுரம் சாலையே தொடா்ந்து பயன்படுத்தப்பட்டதால் ஏமாற்றமடைந்த பொது மக்கள் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளுடன் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு வலியுறுத்திய பொது மக்கள் குடும்ப அட்டைகளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து, பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வருவாய்த் துறையினா் இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.