சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விரிசலை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை விரிசல் சரி செய்யப்பட்டு, பிற்பகலில் படிப்படியாக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.