தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள், பட்டாசு வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் வர்த்தக பகுதியான தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.