இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இளையராஜாவின் பிறந்தநாளான ஜுன் 2ஆம் தேதி நடைபெறும் 'இசை கொண்டாடும் இசை' என்ற தலைப்பிலான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் முன்னோட்டமாக, கையெழுத்து இயக்கத்துக்கான சிறப்பு வாகனத்தை சென்னை பிரசாத் லேபில் இருந்து இளையராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.