ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளைாயாட்டு போட்டியை சென்னை மாநில கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து வந்து பேட் செய்து விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, அவர், உற்சாகமாக அதனை எதிர்கொண்டார்.