மருத்துவமனைகள் மீது விமானப்படை மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்
கரோனாவிற்கு எதிராக நாடு முழுக்க மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும், அரசு ஊழியர்களும் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நாடு முழுவதும் இந்திய ராணுவத்தினர் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், டாக்டர்கள், நர்சுகளுக்கு மீதும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.