ஜி 20 உச்சி மாநாடு: உலக தலைவர்கள் இந்தியா வருகை - புகைப்படங்கள்
18ஆவது ஜி20 உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் தலைநகர் தில்லியில் இன்று தொடங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்தனர்.
சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். பிறகு புதுதில்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடியனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியை வரவேற்ற நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார்.
அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸை வரவேற்ற மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் உருக்கு துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாடு துவங்கும் முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.
எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியை வரவேற்ற மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங்.
ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாலம் விமானப்படை விமான நிலையத்தில் வந்த சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல்-சவுத்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்த தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஜி-20 மாநாட்டை கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக துதில்லியில் வந்தடைந்தார் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனைவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாலம் விமானப்படை விமான நிலையம் வந்தடைந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டை முன்னிட்டு பாலம் விமான நிலையம் வந்தடைந்த சீன பிரதமர் லீ கியாங்கை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் வரவேற்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்ற மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்.
ஜி-20 மாநாட்டை முன்னிட்டு இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கை வரவேற்ற மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன்.
ஜி-20 மாநாட்டை கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கு பாலம் விமானப்படை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டை கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு தில்லி வந்த நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் வரவேற்றார்.
இரவு விருந்தில் கலந்து கொண்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.