ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

14.5.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை இன்று ஆரம்பம்!

சர்க்காரியா கமிஷன் விசாரணை இன்று ஆரம்பம்...

News image

14.5.1976 - Dinamani

Updated On :1 மணி நேரம் முன்பு

புது டில்லி, மே. 13 - பதவியிலிருந்து நீக்கப்பட்ட தி.மு.க. மந்திரிசபையைச் சேர்ந்த சிலர் மீது, செய்யப்பட்டுள்ள ஊழல், நிர்வாக முறைகேடு புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்க்காரியா கமிஷனின் முதல் கூட்டம் நாளை புது டில்லியில் நடக்கிறது.

பொது மக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

நடைமுறைகள், குற்றஞ்சாட்டப்பட்டவர் கிளப்பும் ஆட்சேபங்கள் போன்ற பூர்வாங்க பிரச்னைகள் இக் கூட்டத்தில் கவனிக்கப்படும்.

முன்னாள் முதன் மந்திரி கருணாநிதி, மற்றும் 6 முன்னாள் மந்திரிகள் ஆகியோரின் வக்கீல் ஆஜராவார். பூர்வாங்க விஷயங்கள் தீர்ந்த பிறகு, பிரமாண வாக்கு மூலங்கள் தாக்கல் செய்வதற்காக இந்த 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்.

நாளைய தினம் கமிஷன் முன்பு ஆஜராவதற்காக கருணாநிதி, மாதவன், சாதிக் பாட்சா, ப.உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், ஆதித்தனார், ஓ.பி.ராமன் ஆகியோருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும், வலது கம்யூனிஸ்டு தலைவர் எம். கல்யாண சுந்தரமும் இந்த முன்னாள் மந்திரிகள் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தமாக 57 திட்டவட்டமான புகார்கள் கூறியிருந்தனர். அதில் 27 புகார்கள் இந்தக் கமிஷன் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

விசாரணையின்போது, தனது விசாரணையின் வரம்பை விரிவுபடுத்தும் அதிகாரமும், இந்த ஜாபிதாவில் சேர்க்கப்பட்டிராத வேறு எந்த முன்னாள் மந்திரிக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கும் அதிகாரமும் கமிஷனுக்கு உண்டு.

விசாரணையுடன் சம்பந்தப்பட்ட எந்த நபரையும் சாட்சியமளிக்குமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரமும், விசாரணைக் கமிஷன் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் இந்தக் கமிஷனுக்கு உண்டு. அவசியமெனத் தோன்றினால், மேலும் புகார்களை இந்தக் கமிஷனுக்கு மத்திய சர்க்கார் அனுப்பி வைக்கலாம்.

Summary

May 14, 1976: Sarkaria Commission Inquiry Begins Today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.