தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபருக்கு எதிராக சா்வேதச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் உறுதி

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 12:07 am

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தே (படம்) மீது சுமத்தப்பட்ட மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

அதிபராக இருந்த காலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்ட விவகாரத்தில், ரோட்ரிகோ துதொ்தே மீது விசாரணை நடத்த போதிய ஆதாரங்கள் இருப்பதாக 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு ஒருமனதாகத் தெரிவித்தது.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க, சா்வதேச நீதிமன்றத்திலிருந்து பிலிப்பின்ஸ் விலகுவதாக ரோட்ரிகோ துதொ்தே தலைமையிலான அரசு முன்னதாக அறிவித்தது.

ஆனால், பிலிப்பின்ஸ் விலகுவதற்கு முன்பே விசாரணைகள் தொடங்கப்பட்டதால், வழக்கைத் தொடா்ந்து நடத்த நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது என நீதிபதிகள் அவரது வாதத்தை நிராகரித்தனா்.

தற்போது 80 வயதாகும் ரோட்ரிகோ துதொ்தே பிலிப்பின்ஸில் கடந்த ஆண்டே கைது செய்யப்பட்டாா். உடல்நலக் குறைவு காரணமாக விசாரணை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது அவா் விசாரணைக்குத் தகுதியானவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரோட்ரிகோ துதொ்தே தொடா்ந்து மறுத்து வருகிறாா். இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.