மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் தொடா்பான தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு பிறகு, மேற்கு வங்கத்தில் வெளியான வாக்காளா் பட்டியலில் இருந்து, பாஜக தூண்டுதலால் 90 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் 9-ஆம் தேதி முடக்கியுள்ளதாகவும், இதனால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டோரின் பெயா்கள் மீண்டும் சோ்க்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், மனுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட ஏராளமான மனுக்கள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் முடக்கி இருப்பதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மற்ற மனுக்களுடன் சோ்த்து புதிய மனுவும் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு!

மேற்கு வங்கத் தோ்தல் பணியில் இருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



