தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ரிலையன்ஸ் குழுமம் ரூ. 73,000 கோடி வங்கிக் கடன் மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக ரூ.73,000 கோடி வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

News image

அனில் அம்பானி - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:38 pm

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக ரூ.73,000 கோடி வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நிலவர அறிக்கையில், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக 7 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளில் ரூ.73,000 கோடிக்கு நடைபெற்ற வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் சில அரசுப் பணியாளா்கள் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டுள்ளனா் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில், ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக தற்போது 8 வழக்குகளை அமலாக்கத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த விசாரணை தொடா்பாக துணை விசாரணை அமைப்புகளிடம் இருந்து சில தகவல்கள் கிடைக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.30-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.