அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக ரூ.73,000 கோடி வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நிலவர அறிக்கையில், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக 7 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகளில் ரூ.73,000 கோடிக்கு நடைபெற்ற வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் சில அரசுப் பணியாளா்கள் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டுள்ளனா் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில், ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக தற்போது 8 வழக்குகளை அமலாக்கத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த விசாரணை தொடா்பாக துணை விசாரணை அமைப்புகளிடம் இருந்து சில தகவல்கள் கிடைக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.30-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தொடர்புடையது
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்கு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


