சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விஷப் பாம்பு கடித்தால் அறிகுறிகள் என்ன?

நல்லபாம்பு மற்றும் கட்டுவியன் - அறிகுறிகள்:- * கடிபட்ட இடத்தில் வலி (சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம்). * வீக்கம் ஏற்படும். * பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். * நாக்குத் தடிக்கும். பேச்சு குழறும

Updated On :20 செப்டம்பர் 2012, 12:35 pm

நல்லபாம்பு மற்றும் கட்டுவியன் - அறிகுறிகள்:-

* கடிபட்ட இடத்தில் வலி (சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம்).

* வீக்கம் ஏற்படும்.

* பார்வை மங்கும். கண் இமை சுருங்கும்.

* நாக்குத் தடிக்கும். பேச்சு குழறும். வாயில் எச்சில் வடியும்.

* மூச்சுத் திணறல் ஏற்படும். நினைவாற்றல் குறையும்.

* கட்டுவியன் கடித்தால் இந்த அறிகுறிகளுடன் வயிற்று வலியும்

இருக்கும்.

கண்ணாடி வியன் மற்றும் சுருட்டைப் பாம்பு - அறிகுறிகள்:-

*கடிபட்ட உடன் அதிக வலி.

* கடிபட்ட இடத்தில் வீக்கம் (கண்ணாடி வியன் கடித்தால் வீக்கம்

இல்லாமலும் இருக்கலாம்).

* கடிபட்ட இடம் நிறம் மாறும்.

* மூச்சுத் திணறல், வாந்தி, சோர்வு ஏற்படும்.

* உமிழ் நீர், வாந்தி, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.

* சிறுநீரகம் பாதிக்கப்படும்.

* பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம்.

* எந்த பாம்பு கடித்தாலும் உடனடி சிகிச்சை அவசியம்.

* வலி நிவாரண மாத்திரைகளை உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடாதீர்கள். சிறுநீரகத்தில் பாதிப்பு ஆரம்பித்து செயலிழப்பு வரை செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.