திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

குழந்தையின்மைக் குறைபாடு அதிகரித்து வருவது கவலைக்குரியது

திருமணமான இளம் தம்பதியினரிடையே குழந்தையின்மைக் குறைபாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது ஜனனம் குழந்தைபேறு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வாணி சௌ

Updated On :3 ஜனவரி 2024, 4:12 pm IST

திருமணமான இளம் தம்பதியினரிடையே குழந்தையின்மைக் குறைபாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது ஜனனம் குழந்தைபேறு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வாணி சௌந்திரபாண்டியன் கூறினார்.

சென்னை நீலாங்கரையில் ஜனனம் குழந்தைபேறு மருத்துவமனை துவக்கவிழா நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது

குழந்தைபேறு இன்மை ஒரு குறைபாடு தானே தவிர நோய் அல்ல.அந்த குறைபாட்டை உரிய சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும்.இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் குழந்தையின்மை குறைபாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இதற்கு குறிப்பிட்ட சில காரணங்களைத் தவிர வேறுகாரணங்களும் இருக்கக்கூடும்.

ஆண்,பெண் இருவரும் குறித்த வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளாமல் தாமதமாக திருமணம் செய்து கொள்வது,சத்துள்ள இயற்கை உணவு வகைகளை சாப்பிடாமல் உணவுப்பழக்கங்களில் மாற்றம்,வேலை நேரம் மாறுதல்,அதிக உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்து கொண்டே வேலை செய்வது, வேலை,தொழில் தொடர்பான பதட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆண்களிடம் சராசரியாக இருந்த 60 லட்சம் விந்தணுக்களின் எண்ணிக்கை தற்போது சராசரியாக மூன்றில்  ஒரு பங்காக

குறைந்து இருப்பதும் ஆய்வுக்குரியது. உலக வெப்பமயம்,சுற்றுச்சூழல் பாதிப்பு,கதிர்வீச்சு,பதட்டமான வாழ்க்கைமுறை செல்போன்,கம்ப்யூட்டர்  பயன்பாடு,உணவு,காய்கறிகளில் ரசாயன உரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் காரணமாக இருக்கக்கூடும்.

குழந்தைபேறுக்கான  செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையில் தற்போது உலகஅளவில் சராசரியாக 40 முதல் 50 சதவிகிதம் தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.

திருமணமான ஒரு ஆண்டில் கருத்தரிக்கவில்லை என்றால் தம்பதிகள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் வாணி சௌந்திரபாண்டியன்.

லண்டன் ஹார்லே ஸ்டிரீட் கிளினிக் மருத்துவரும் ஜனனம் செயற்கைக் கருத்தரிப்பு மையம் நிர்வாக இயக்குனருமான டாக்டர் செல்வாஅண்ணாமலை,சிட்டி கென்ட்ஸ்பெஷலிஸ்ட் கிளீனிங் குருப் நிர்வாக இயக்குனர் ஐன்பீத்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.