கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

இன்றைய மருத்துவ சிந்தனை பெருங்காயம்

பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து , குழந்தைகளின் நெஞ்சில் தடவிவந்தால் கக்குவான்

News image
Updated On :9 மே 2017, 8:37 am IST

பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

பெருங்காயம், கிராம்பு இரண்டையும் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குணமாகும்.

பெருங்காயம் ஒரு பங்கு, வெந்தயம் பத்து பங்கு எடுத்து இரண்டையும் வறுத்துப் பொடி செய்து, கால் ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்துவந்தால் கடுமையான வயிற்று வலி உடனே குணமாகும்.

பெருங்காயம், மிளகு இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து வெந்நீரில்  போட்டுக் குடித்தால் தலைவலி குணமாகும்.

பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

பெருங்காயத்தை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு அந்த எண்ணெயில் இரண்டு துளிகளை காதில் விட்டால் காது வலி குணமாகும்.

பெருங்காயத்தைப் பொரித்து பூண்டு மற்றும் பனை வெல்லத்தோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டால், பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப் பையில் உள்ள அழுக்கு வெளியேறும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.