ஆண்களைவிடப் பெண்களுக்கே ரத்தசோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது, ஐந்தில் ஒரு பகுதி ஆண்களே ரத்தசோகையால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது மற்றொரு ஆய்வு. பெண்களுக்குப் பலவிதமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த ரத்தசோகை, மூச்சிறைத்தல், படபடப்பு, உடல் சோர்வுடன் மாதவிலக்குப் பிரச்னைகளையும் உண்டாக்குகிறது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்பட்டு தாய் இறந்து போவதற்கும் சில சமயங்களில் இந்த ரத்தசோகைதான் காரணமாக இருக்கிறது. முதலில் இந்த ரத்தசோகை என்பது என்ன? அது ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்று தெரிந்து கொள்வோம்.