நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் இரண்டு வாரங்களில் ரூ.1,500 கோடி வசூலித்து வரலாறு படைத்துள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து வெளியான இதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்தது. தற்போது 15 நாள்களில் ரூ.1501 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Summary
இந்தியாவில் மட்டுமே இந்தப் படம் ரூ.1,134 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 367 கோடியும் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படமாக ஆமிர் கானின் தங்கல் ரூ.2,000 கோடி வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary
'Dhurandhar: The Revenge' grosses Rs 1,500 crore worldwide in two weeks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!

இந்தியாவில் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்த துரந்தர் தி ரிவெஞ்ச்..! பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா?

ரூ.1,088 கோடி வசூலித்து வரலாறு படைத்த துரந்தர் தி ரிவென்ஞ்ச்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

7 நாள்களில் ரூ. 1,000 கோடி! வசூல் சாதனையில் துரந்தர் 2!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




