தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

பனிக்காலத்தில் தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்க சில வழிகள்!

மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம்.

News image
Updated On :2 டிசம்பர் 2018, 11:50 am IST
  • மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம். வெது வெதுப்பான நீரில், இஞ்சி சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இது தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்கும்.
  • பனிக்காலங்களில், எல்லாமே சூடாக எடுத்துக் கொள்வது நல்லது.
  • சித்தரத்தை, அதிமதுரம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
  • எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்து, எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
  • வேப்பம்பூவை உணவில், அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வாயு தொந்தரவுகள், பித்தம், பசியின்மை இவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
  • மசாலா பொருட்களை தவிர்ப்பது நல்லது.
  • கண்டிப்பாக, உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் கிடைக்கும்.
  • நெஞ்சில் கபம், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமல் இருக்க தலையையும் உடலையும் மூடிக் கொண்டு வெளியில் செல்வது நல்லது.
  • பனிக்காலத்தில் கிருமிகள் அதிகமாக உற்பத்தியாவதால் அவற்றிலிருந்து காத்துக் கொள்ள சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

- கிரிஜா ராகவன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.