மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம். வெது வெதுப்பான நீரில், இஞ்சி சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இது தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்கும்.
பனிக்காலங்களில், எல்லாமே சூடாக எடுத்துக் கொள்வது நல்லது.
சித்தரத்தை, அதிமதுரம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்து, எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
வேப்பம்பூவை உணவில், அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வாயு தொந்தரவுகள், பித்தம், பசியின்மை இவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
மசாலா பொருட்களை தவிர்ப்பது நல்லது.
கண்டிப்பாக, உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் கிடைக்கும்.
நெஞ்சில் கபம், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமல் இருக்க தலையையும் உடலையும் மூடிக் கொண்டு வெளியில் செல்வது நல்லது.
பனிக்காலத்தில் கிருமிகள் அதிகமாக உற்பத்தியாவதால் அவற்றிலிருந்து காத்துக் கொள்ள சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.