ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

பனிக்காலத்தில் தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்க சில வழிகள்!

மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:17 pm IST
  • மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம். வெது வெதுப்பான நீரில், இஞ்சி சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இது தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்கும்.
  • பனிக்காலங்களில், எல்லாமே சூடாக எடுத்துக் கொள்வது நல்லது.
  • சித்தரத்தை, அதிமதுரம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
  • எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்து, எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
  • வேப்பம்பூவை உணவில், அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வாயு தொந்தரவுகள், பித்தம், பசியின்மை இவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
  • மசாலா பொருட்களை தவிர்ப்பது நல்லது.
  • கண்டிப்பாக, உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் கிடைக்கும்.
  • நெஞ்சில் கபம், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமல் இருக்க தலையையும் உடலையும் மூடிக் கொண்டு வெளியில் செல்வது நல்லது.
  • பனிக்காலத்தில் கிருமிகள் அதிகமாக உற்பத்தியாவதால் அவற்றிலிருந்து காத்துக் கொள்ள சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

- கிரிஜா ராகவன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.