சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
தீர்வு : கோவைக்காய் (10), பீர்க்கங்காய் (1), வெற்றிலை (2), புதினா (சிறிதளவு) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மோர் அல்லது தண்ணீர் நிறைய ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும் . தீர்ந்துவிட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும். கோவைக்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.
மேற்பூச்சு தைலம் : 100 மில்லி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் , கோவா இலை பூ(50) எடுத்து இரண்டையும் சேர்த்து தலைப்பதத்தில் காய்ச்ச வேண்டும்.
பூக்கள் பொரிந்து மொறுமொறுவென று வரும்போது எடுத்துவிடவும்.பின்பு இந்த எண்ணெய்யை மேற்பூச்சாக பயன்படுத்தி வரவும்.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com