
தீர்வு : முற்றின முருங்கை விதை (10), வெண் பூசணிக்காய் (100 கிராம்), புடலங்காய் (100 கிராம்) இவைகளை நன்றாக கழுவி நறுக்கி மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் இரவு வேளை உணவாக குடிக்கவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம்.
முருங்கைக் கீரை சிறிதளவும், மணத்தக்காளிக் கீரை காயுடன் சிறிதளவும் எடுத்து இரண்டையும் நீராவியில் ஒன்றாக வேக வைத்து பொரியலாக காலை மற்றும் மதியம் வேளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
பீட்ரூட் சாறு (அரை டம்ளர்), தண்ணீர் (அரை தம்ளர்) இவை இரண்டையும் கலந்து இரவு உறங்க போவதற்கு முன்பாக குடித்து வந்தால் பல மாதங்களாக உள்ள மலச் சிக்கலும், குணமாகும்.
சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.