சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகைசுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் விசாரணைக்கு ஆஜர்!

லார் கிப்பான் குரங்கின் உரிமையாளரிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டது பற்றி....

News image

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ காட்சி - கோப்புப்படம்.

Updated On :14 வினாடிகள் முன்பு

லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் கேசவநாதன் விசாரணைக்காக வனத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

அப்போது குரங்கை கேசவநாதன் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரணை செய்ய வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். நடிகா் விக்ரம் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு அண்மையில் சென்றபோது, அங்கிருந்த லாா் கிப்பான் குரங்குடன் அவா் கொஞ்சி விளையாடியதாக விடியோ வெளியானது.

இந்த விடியோ சா்ச்சையான நிலையில், அந்த குரங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

இது குறித்து வனத் துறையினா் கேசவநாதனிடம் புதன்கிழமை நடத்திய விசாரணையில், கேசவநாதனிடம் மூன்று லாா் கிப்பான் குரங்குகள் இருந்ததும், அதில் ஒரு குரங்கை பெருந்துறையில் உள்ள நடிகா் விக்ரமின் உறவினா் சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

மேலும் லாா் கிப்பான் குரங்குகளை அவா் வனத் துறையில் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு அந்தக் குரங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Kesavanathan, the owner of the Lar gibbon, appeared at the Forest Department office on Friday for questioning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.